உலகம்
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டோர் பனாமாவில் தங்க வைப்பு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டோர் பனாமாவில் தங்க வைப்பு!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோர் தற்போது பனாமாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரே இவ்வாறு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 299 புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.