இந்தியா
இந்தியா தனது முதல் குறைக்கடத்தி சிப்பை எதிர்வரும் ஒக்டோபருக்குள் தயாரிக்கும்!

இந்தியா தனது முதல் குறைக்கடத்தி சிப்பை எதிர்வரும் ஒக்டோபருக்குள் தயாரிக்கும்!
இந்தியா தனது முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைக்கடத்தி சிப்பை செப்டம்பர் அல்லது ஓக்டோபர் 2025க்குள் தயாரிக்க உள்ளது என்று இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டாடா எலக்ட்ரோனிக்ஸ் குஜராத்தின் தோலேராவில் தாய்வானின் பவர்சிப் குறைக்கடத்தி உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து ஒரு குறைக்கடத்தி பிரிவு ஒன்றைக் நிர்மாணித்து வருகிறது.
இதற்கிடையில், குஜராத்தின் சனந்த் பிரதேசத்தில் உள்ள மைக்ரானின் சோதனை மற்றும் ஒருங்குபடுத்தல் வசதி 60% நிறைவடைந்துள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் மின் துறைகளுக்கு முக்கியமான காலியம் நைட்ரைடு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக பெங்களூரில் அறிவியல் கழகம் அமைக்க அரசாங்கம் 334 கோடி இந்திய ரூபாய் ( 38.52 மில்லியன் டொலர்) ஒதுக்கியுள்ளது.
இந்திய குறைக்கடத்தி குறிக்கோளின் முதல் கட்டத்தை அமைச்சு இறுதி செய்து வருகிறது. இதில் மொஹாலியில் ஒரு குறைக்கடத்தி ஆய்வகத்தை மேம்படுத்துவது உட்பட, அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து ISM 2.0 தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த முயற்சி, 2021 ஆம் ஆண்டில் 76,000 கோடி இந்திய ரூபாய் (8.76 பில்லியன் டொலர்) செலவில் தொடங்கப்பட்ட செமிகொன் இந்தியா திட்டத்தின் கீழ், உலகளாவிய குறைக்கடத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாகும்.