இந்தியா
ஆக்ராவிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தியும் பேருந்தும் மோதி விபத்து!

ஆக்ராவிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தியும் பேருந்தும் மோதி விபத்து!
இந்தியாவின் ஆக்ராவிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றின் மீது பேருந்து ஒன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று காலை சம்பவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.