Connect with us

பொழுதுபோக்கு

பழமையான பாலம்: ஒவ்வொரு வளைவும் ஒரு கதை; எதிர்நீச்சல் நடிகை எங்கு இருக்கிறார் தெரியுமா?

Published

on

Madhumitha Ethirneechal

Loading

பழமையான பாலம்: ஒவ்வொரு வளைவும் ஒரு கதை; எதிர்நீச்சல் நடிகை எங்கு இருக்கிறார் தெரியுமா?

நடிகை மதுமிதா.எச். கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார்.இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.தற்போது எதிர்நீச்சல் 2 சீரியல் விரைவில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் மதுமிதா நடித்த ஜனனி கேரக்டருக்கு வேறொரு நடிகை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மதுமிதா தற்போது விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மதுமிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் பழமைவாய்ந்த ரயில் நிலை மேம்பாலத்தில் இருந்து எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.“ஒவ்வொரு வளைவும் ஒரு கதையைச் சொல்லும் காலத்தால் அழியாத 9 வளைவுகள் பாலத்தில் நிமிர்ந்து நிற்கிறேன் என்று நடிகை மதுமிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன