இந்தியா
மனைவிக்காக புலியுடன் போராடிய கணவர்!

மனைவிக்காக புலியுடன் போராடிய கணவர்!
இந்தியாவின் உத்திர பிரதேசம் – புல்வாரியா என்ற கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த சீதா தேவி எனும் பெண்ணை புலி தாக்கியுள்ளது.
அவ்வேளையில் அப்பெண்ணின் கணவர் அப்புலியை அடித்த கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீதாவின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த கணவர் புலியிடமிருந்து தன் மனைவியை காப்பாற்றி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.