பொழுதுபோக்கு
இளவரசி கால ஆடையா இருக்குமோ! ப்ரீத்தி சர்மா பியூட்டி க்ளிக்ஸ்

இளவரசி கால ஆடையா இருக்குமோ! ப்ரீத்தி சர்மா பியூட்டி க்ளிக்ஸ்
உத்திரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்த ப்ரீத்தி ஷர்மா சிறுவயது முதலே குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார். அங்கு தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.12ம் வகுப்பு படிக்கும்போது ‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அதன்பிறகு கல்லூரி படித்தபோது, பாடகராக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டுள்ளார்.இந்த நேரத்தில்தான் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த ப்ரீத்தி சர்மா, போட்டோஷூட்டிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த ப்ரீத்தி சர்மா தான அறிமுகமான திருமணம் சீரியலில் நெகடீவ் கேரக்டரில் நடித்திருந்தார்.சன்டிவியின் சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்து புகழ் பெற்ற நடிகை ப்ரீத்தி சர்மா. ஜீ தமிழின் திருமணம் என்னும் சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சித்தி 2 சீரியலில் நடித்திருந்தார்.சித்தி 2 சீரியல் ப்ரீத்தி சர்மாவுக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. ஆனால் சில மாதங்களில் இந்த சீரியலில் இருந்து ராதிகா விலகினார். ஆனாலும் ப்ரீத்தி சர்மா நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.மீண்டும் சன்டிவியில் என்டரி ஆகியுள்ள ப்ரீத்தி சர்மா தற்போது மலர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக விஜே அக்னி நடித்து வந்தார்.