இந்தியா
போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சி மடத்தில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் போராட்டத்தை தங்காலிகமாக இடைநிறுத்த அந்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், மார்ச் 21ஆம் திகதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.