இலங்கை
யாழில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்; நடந்தது என்ன?

யாழில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம்; நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மருதடி வீதியை சேர்ந்த , 41 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வீட்டில் வசித்து வந்த நிலையிலையே, குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.