Connect with us

இலங்கை

வீட்டை கதவை உடைத்து நகைகள் திருட்டு

Published

on

Loading

வீட்டை கதவை உடைத்து நகைகள் திருட்டு

  நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்களைத் திருடிய சந்தேக நபர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் நீர்கொழும்பு – கொடகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கைக்கடிகாரம், டெப் கணினி மற்றும் கமரா உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன