டி.வி
சந்தேகப்படும் கணவனுக்கு சர்ப்ரைஸ்: மாமன் மகளை காப்பாற்றுவாரா ஹீரோ?

சந்தேகப்படும் கணவனுக்கு சர்ப்ரைஸ்: மாமன் மகளை காப்பாற்றுவாரா ஹீரோ?
அஞ்சலியை நோட்டமிடும் மகேஷ்.. வெற்றியை கோர்த்துவிட்ட துளசி – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் அஞ்சலி வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டிக்கொண்டு ஆபீஸ் கிளம்பிய நிலையில், வெற்றி பாட்டி சமைத்த போலியை எடுத்துக் கொண்டு லட்சுமி வீட்டுக்கு வர தீபா அவனை பார்த்து டேய் என்னடா நீ இங்க என்று கேட்க பாட்டி போலி செய்தாங்க உனக்கு புடிக்கும்னு கொண்டு வந்தேன் என்று சொல்லி கொடுக்கிறான். லட்சுமி வெற்றி வரவேற்று வாப்பா உட்காரு சாப்பிடு என்று உபசரிக்கிறாள்.மறுபக்கம் ஆபீஸ் மகேஷ் வீட்டில் பிக்ஸ் செய்து வைத்திருக்கும் சிசிடிவி கேமரா மூலம் அஞ்சலி என்ன செய்கிறாள் என்பதை மொபைலில் கவனிக்கிறான். அஞ்சலி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருக்க அதை பார்த்து சந்தோஷப்படுகிறான். இங்கே துளசி வெளியில் வர வெற்றியை பார்த்து ஷாக் ஆகிறாள். துளசியை பார்த்த வெற்றி ரொமான்டிக்காக அவளைப் பார்க்கிறான். பிறகு துளசிக்கு போலி இல்லாததை கவனித்து இந்தாங்க நீங்க சாப்பிடுங்க நான் வீட்டுக்கு போய் சாப்பிடுறேன் என்று கொடுக்கிறான்.துளசி வெற்றியை தனியாக அழைத்துச் சென்று ரோட்ல ஃபாலோ பண்ணது போதாதுனு இங்கேயே வந்துட்டீங்களா என்று சத்தம் போடுகிறாள். அடுத்து உங்க அக்கா கிட்ட போய் இப்பவே கமலி பத்தி கேட்கிறேன் என்று சொல்லி சொல்ல அப்படி ஒரு கேரக்டர் இல்லவே இல்லையே என்று வெற்றி பதறுகிறான். தீபாவிடம் சென்ற துளசி உங்க தம்பியை பத்தி சொல்லுங்க என்று கேட்க தீபா வெற்றியைப் பற்றி பெருமையாக சொல்கிறாள்.துளசி உங்க தம்பி பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தாரு என்று சொல்லி கோர்த்து விட தீபா வெற்றியின் காதை பிடித்து துருகி அப்பா உனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காரு நீ என்ன வேலை பார்த்துட்டு இருக்க என்று திட்டுகிறாள். இந்த சமயத்தில் ஈஸ்வரமூர்த்தி தீபாவுக்கு போன் செய்ய தீபா வெற்றி வந்து இருக்கும் விஷயத்தை சொல்ல அவர் ஷாக் ஆகிறார். வெற்றிடம் போனை கொடுக்க சொல்லி உன்னை சேர்மனை பார்க்க சொல்லி அனுப்பினால் நீ எதுக்கு அங்க போன என திட்டுகிறார். அடுத்ததாக இங்கே அஞ்சலி அம்மா லட்சுமிக்கு போன் போட்டு எல்லோரும் என்ன பண்றீங்க என்ன அனைவரிடமும் போனில் பேச மகேஷ் இதை சிசிடிவி கேமராவில் பார்த்து இவ யார்கிட்ட பேசுற என குழப்பம் அடைகிறான். தொடர்ந்து அஞ்சலிக்கு போன் செய்ய அவளது போன் பிஸியாகவே இருக்க மேலும் டென்ஷன் ஆகிறான். அஞ்சலி அம்மாவிடம் அவருக்கு புடிச்சது சமைக்க போறேன் என்று சொல்லி புலாவ் எப்படி செய்வது என்று கேட்டு சமைக்கிறாள்.ரொம்ப நேரம் பேசிய பிறகு அஞ்சலி போன் வைக்க மகேஷ் போன் போட்டு இவ்வளவு நேரம் யார்கிட்ட பேசிட்டு இருந்த அஞ்சலி என கேள்வி கேட்க அம்மாவிடம் பேசிட்டு இருந்ததாகவும் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு சாயங்காலம் சீக்கிரம் வந்துடுங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உண்மையை உடைத்த கார்த்திக்.. ஷாக் கொடுத்த சாமுண்டேஸ்வரி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் ராவதியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட திட்டமிட்ட நிலையில் இன்று, ராஜேஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து நீ கார்த்திக், பிசினஸ் மேன் தானே என்று விசாரிக்க கார்த்திக் ஆமாம் நீங்க ராஜேஸ்வரி தானே.. உங்களை எனக்கு தெரியும் என்று சொல்கிறான். மேலும் எதுக்காக நான் இங்க வந்திருக்கேன் என்பதையும் சொல்றேன், அப்போது தான் ஒரு நல்ல விஷயத்திற்காக தான் வந்திருக்கேன் என்பது உங்களுக்கு புரியும் என சொல்கிறான்.கடைசியில் இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க தான் வந்திருக்கான் என்பதை அறியும் ராஜேஸ்வரி நான் உண்மையை சொல்ல மாட்டேன் என்று சொல்கிறாள். அடுத்ததாக மயில்வாகனம் பாட்டி சொன்ன இலையை பறித்து வந்து கோட்டில் தேய்த்து அதை கொண்டு போய் மகேஷிடம் கொடுத்து சாமுண்டீஸ்வரி போட்டு கொள்ள சொன்னதாக சொல்லி போட வைக்கிறான். பிறகு ரேவதி மற்றும் மகேஷ் என இருவரும் மேடை ஏறி டான்ஸ் ஆட தொடங்க மகேஷ்க்கு அரிப்பு ஏற்பட்டு நடத்தனத்தில் சுதப்புகிறான். பிறகு ஸ்வாதி டான்ஸ் ஆடுகிறாள். அடுத்து மயில் வாகனம் மற்றும் ரோகிணி ஆடுகின்றனர்.இதையடுத்து எல்லாரும் சேர்ந்து நடனமாட சாமுண்டீஸ்வரி அங்கு வர அனைவரும் ஷாக் ஆகின்றனர். யாரும் எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரியும் அவர்களுடன் சேர்ந்து நடனமாட எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.