Connect with us

இலங்கை

அமெரிக்கக் கொள்கைகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து

Published

on

Loading

அமெரிக்கக் கொள்கைகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து

ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக இலங்கைக்குப் பெரும் ஆபத்துக் காத்திருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியா உட்பட பல நாடுகள் மீது வரி சமநிலைப்படுத்தல் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வருகின்றார். இந்த நடவடிக்கைகள் இலங்கைக்கு ஓர் எச்சரிக்கையே. ஆதலால், அமெரிக்காவின் வர்த்தகப் போரை அல்லது வரி சமநிலைப்படுத்தல் நடவடிக்கையை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்க வேண்டும்.

வர்த்தகச் சுவர்கள் அமெரிக்காவுடனான எமது அணுகலைத் தடுக்கும் முன்னர், அவசர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தை குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். உதாசீனமாகச் செயற்படக்கூடிய விடயம் இதுவல்ல – என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன