இலங்கை
முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது

முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது
முச்சக்கரவண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்றதாக கூறப்படும் பெண் உட்பட இருவர் நேற்று வியாழக்கிழமை (06) அதிகாலை கஸ்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஸ்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஸ்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேக்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய பெண்ணும் 37 வயதுடைய ஆணுமே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடமிருந்து 67 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஸ்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.