Connect with us

இலங்கை

முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது

Published

on

Loading

முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது

முச்சக்கரவண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்றதாக கூறப்படும் பெண் உட்பட இருவர் நேற்று வியாழக்கிழமை (06) அதிகாலை கஸ்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஸ்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஸ்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேக்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய பெண்ணும் 37 வயதுடைய ஆணுமே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடமிருந்து 67 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஸ்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன