Connect with us

இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

Published

on

Loading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

Advertisement

இந்த கலந்துரையாடலில் மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள், துணை மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

4,872 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.

Advertisement

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன