இலங்கை
போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் மீது பல்வேறு நபர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை, அதிகாரிகளின் சீருடையில் கெமராக்களை பொருத்துவதன் மூலம் சரிபார்க்க முடியும் என்றும் போக்குவரத்து பொலிஸ் பிரிவு கூறுகிறது.
இதற்கான ஒவ்வொரு கெமராவும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
வீதி பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் எதிர்காலத்தில் அமெரிக்காவிலிருந்து அதிக வேக கெமராக்களை முன்பதிவு செய்ய இலங்கை பொலிஸ் திணைக்களம் நம்பிக்கை கொண்டுள்ளது.