இலங்கை
தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!
பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தகம பிரதேசத்தில் வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய அசேலபுர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.[ஒ]