Connect with us

இலங்கை

பிக்கு கொலை; நாடு திரும்பிய இளம் பெண் கைது!

Published

on

Loading

பிக்கு கொலை; நாடு திரும்பிய இளம் பெண் கைது!

கடந்த 14.09.2022 அன்று சீதுவ காவல் பிரிவுக்குட்பட்ட வெத்தெவ பகுதியில் புத்த பிக்கு ஒருவரின் கொலை மற்றும் சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்கு கொலையை அதே விகாரையில் வசிக்கும் ஒரு பிக்கு செய்திருப்பதும், அந்த பிக்குவுடன் தொடர்பில் இருந்த வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பெண் இந்தக் கொலையைச் செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதும் தெரியவந்தது.

Advertisement

விசாரணைக்குப் பிறகு, சந்தேக நபர் தொடர்பான உண்மைகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, விமானப் பயணத் தடை பெறப்பட்டது.

அதன்படி, இந்த சந்தேக நபர் 12.03.2025 அன்று அதிகாலை துபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தடைந்ததும் விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுளார்.

கைதான பெண் விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு சீதுவ பொலிஸ் நிலையத்தால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

கைது செய்யப்பட்ட பெண், மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன