இலங்கை
புளியங்குளத்தில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

புளியங்குளத்தில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்பிதிகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்றிரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே நயினாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.