Connect with us

சினிமா

பா. ரஞ்சித், மாரி செல்வராஜ்ஜின் கதைகள் ஒரே மாதிரியா..? – ஷாம் அதிரடிக் கருத்து!

Published

on

Loading

பா. ரஞ்சித், மாரி செல்வராஜ்ஜின் கதைகள் ஒரே மாதிரியா..? – ஷாம் அதிரடிக் கருத்து!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக சமூகத்தைக் கவனத்திற்கொண்டு படைப்புகளை உருவாக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர்களாக பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் காணப்படுகின்றனர். இவர்களின் படங்கள் சமூக நீதியை மையமாகக் கொண்டு இருக்கின்றன. ஆனால், நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டியில் அவர்கள் ஒரே மாதிரி படங்கள் எடுக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.நடிகர் ஷாம், பல ரொமாண்டிக் கதைகளின் மூலம் பிரபலமானவர். சமீப காலமாக நடிக்க அதிக வாய்ப்புகள் இல்லாததால், சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறையில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பங்கேற்று, பல விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.மேலும் ஏழை, ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தொடர்ந்து படங்கள் உருவாக்கப்படுவதைப் பற்றி ஷாம் கருத்து தெரிவித்திருக்கிறார். “பாதிக்கப்பட்ட மக்களோட வாழ்க்கையை பேசுறது நல்லது தான். ஆனா, ஒவ்வொரு படமும் அதே மாதிரி இருந்தா அது ஒரு கட்டத்தில் பவர்புல் ஆகாது என்றார். பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் இருவரும் ஒரே மாதிரி சமூக நீதியை மையமாக வைத்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் எடுக்கிறார்கள். அதனால் தான் சிலருக்கு ஒரே மாதிரி பீல் வருது என்றார். இந்த சர்ச்சைக்கு பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர்களும், இந்தக் கருத்தை கவனித்திருக்கலாம் அல்லது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம் என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன