Connect with us

இலங்கை

பெண் வைத்தியரை பாலியல் சீண்டல் செய்தவரை கடுமையாக தாக்கிய பொலிஸார்

Published

on

Loading

பெண் வைத்தியரை பாலியல் சீண்டல் செய்தவரை கடுமையாக தாக்கிய பொலிஸார்

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் மருத்துவரை தகாத முறைக்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ வீரரை பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் மருத்துவரை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் படைவீரர் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisement

பொலிஸார் தம்மை கடுமையாக தாக்கியதாக அவர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றிலை முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இதன் போது குறித்த சந்தேக நபர் நேராக நிற்க முடியாதிருந்த காரணத்தினால் நீதவான் அவரை நேராக நிற்குமாறு பணித்துள்ளார்.

பொலிஸார் கடுமையாக தாக்கியதனால் தம்மால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை என சந்தேக நபர், நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்க்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன