Connect with us

இலங்கை

இலஞ்சம் பெற்று சிக்கிய பொலிஸ் அதிகாரி

Published

on

Loading

இலஞ்சம் பெற்று சிக்கிய பொலிஸ் அதிகாரி

அடிப்பல பிரதேசத்தில் 1,500 ரூபாவை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

Advertisement

அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பண்டாரஹேனவில் உள்ள கைசர் பைபிள் தேவாலயத்தில் நேற்று (14)  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்  இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்குத் தேவையான பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காக முறைப்பாட்டாளரிடம் முதலில் 2,000 ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பின்னர்  1,500 ரூபாவை இலஞ்சமாக கோரியதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன