இலங்கை
அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு: தொடரும் அட்டூழியங்கள்

அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு: தொடரும் அட்டூழியங்கள்
மிதிகம – பத்தேகம பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டின் முன் சுவரில் 3 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும், 1 தோட்டா ஜன்னல் பகுதியைத் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.