இலங்கை
நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிப்பு

நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிப்பு
ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த , சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.