Connect with us

இலங்கை

இந்திய இளம் தம்பதி கட்டுநாயக்கவில் கைது

Published

on

Loading

இந்திய இளம் தம்பதி கட்டுநாயக்கவில் கைது

  2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (17) செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 32 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சந்தேக நபர்கள் இருவரும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று காலை 11.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிலோ 400 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன