தொழில்நுட்பம்
ஐ.பி.எல். போட்டிகளை இலவசமாக பார்க்க வேண்டுமா? – ரூ.299க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் போதும்! – ஜியோ அறிவிப்பு

ஐ.பி.எல். போட்டிகளை இலவசமாக பார்க்க வேண்டுமா? – ரூ.299க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் போதும்! – ஜியோ அறிவிப்பு
ஐ.பி.எல். சீசன் வரவிருக்கும் நிலையில், ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது புதிய ஜியோ சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாள் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை ஜியோ நிறுவனம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.இந்தக் காலகட்டத்தில் ரூ.299 திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அல்லது அதற்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் புதிய ஜியோ சிம் பெறுபவர்களும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.மார்ச் 31 வரை ரூ.299 திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அல்லது அதற்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் தற்போதைய ஜியோ சிம் பயனர்கள் இந்த சலுகையைப் பெற முடியும்.கிரிக்கெட் பிரியர்களுக்காக, ஜியோ தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது. அதே வேளையில், வீட்டிற்கு 50 நாள் இலவச ஜியோ ஃபைபர் அல்லது ஏர் பைபர் சோதனை இணைப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.மார்ச் 17-ம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் ரூ.100 கூடுதலாக ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த நன்மைகளை பெறலாம். அதே வேளையில் ஜியோ ஹாட்ஸ்டார் பேக் மார்ச் 22, 2025 முதல், அதாவது கிரிக்கெட் சீசனின் தொடக்க போட்டி நாள் முதல் இது நடைமுறைபடுத்தப்படும். இந்த பேக் 90 நாட்களுக்கு செயல்படும்.இந்தத் திட்டம் அனைத்து ஜியோ சிம் பயனர்களுக்கும் பொருந்தும், இதன் மூலம் அவர்கள் ஐ.பி.எல். போட்டிகளை ஸ்மார்ட்போன் அல்லது டி.வியில், 4K தெளிவில் பார்த்து ரசிக்க முடியும்.