இலங்கை
பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை; பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிராக தண்டம் விதிப்பு!

பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை; பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிராக தண்டம் விதிப்பு!
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், பூட்சிற்றிகள், உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் ம. அனுசூதனன் தலைமையிலான குழுவினரால் கடந்த 12ஆம் திகதி பூட் சிற்றிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள பூட்சிற்றியில், பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் உரிய வெப்பநிலை பேணப்படாமல், பதனழிந்த ஐஸ்கிறீம்களை விற்பனைக்காக வெளிக்காட்டி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து பழுதடைந்த குளிர்சாதன பெட்டியுடன் பதனழிந்த ஐஸ்கிறீம்களை பொது சுகாதார பரிசோதகர் ம. அனுசூதனன் கைப்பற்றினார்.
இதுதொடர்பில் நேற்றையதினம் பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிராக மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிவான், பூட்சிற்றி முகாமையாளரிற்கு 135,000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.