Connect with us

இலங்கை

மாந்தை மேற்கு விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!

Published

on

Loading

மாந்தை மேற்கு விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்திலுள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானையொன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானை 18 வயதுடையது என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்;
சம்பவ தினத்தன்று அப்பகுதிக்குச் சென்றவர்கள் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை அவதானித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார், மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் ஆகியோர் குறித்த வயல் பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.

Advertisement

நீண்ட காலமாக அப்பகுதியில் குறித்த யானை தொடர்ச்சியாக நெற்பயிரை சேதப்படுத்தி வந்ததாகவும் தெரியவந்த நிலையில், உயிரிழந்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த விவசாயக்காணியின் உரிமையாளர் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன