Connect with us

இலங்கை

உயிரிழந்த மாணவிக்குத் தேகாந்த நிலையில் பட்டம்!

Published

on

Loading

உயிரிழந்த மாணவிக்குத் தேகாந்த நிலையில் பட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழககக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக மரணமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை, பெற்றோர் பட்டம் பெற்ற அந்தத் தருணம் உணர்ச்சி மிகுந்ததாக அவையில் இருந்தவர்கள் கண்ணீர் மல்க அமர்ந்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன