Connect with us

இலங்கை

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம்

Published

on

Loading

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம்

   யாழ்ப்பாணத்தில் சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகை யாழில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட , மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு , உரிய சுட்டு துண்டுகள் இன்றி சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமையை சோதனையில் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

குறித்த சொக்லேட் வகைகள் , ஊசி (சிரிஞ்), ஊசி மருந்து மற்றும் சைனேட் குப்பி வடிவங்களில் காணப்பட்டுள்ளன.

Advertisement

அவற்றினை சான்று பொருட்களாக கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் , கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன