Connect with us

இந்தியா

சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்டப்பூர்வ குடியேற்றத்தை அதிகரிக்கிறதா அமெரிக்கா?

Published

on

2

Loading

சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்டப்பூர்வ குடியேற்றத்தை அதிகரிக்கிறதா அமெரிக்கா?

அமெரிக்க எல்லைகளைப் பாதுகாப்பதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த நபர்களை நாடு கடத்துவதில் டிரம்ப் கவனம் செலுத்தினார். கடந்த மாதம் அமெரிக்காவிற்குள் நுழைந்த 333 இந்தியர்கள் அமெரிக்க ராணுவத்தால் 3 தனி விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டனர்.இருப்பினும், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை, சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்த அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தால் வேறுபடுகிறது. அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஜனவரி 2025-ல் முந்தைய ஆண்டை விட 16,676 விசாக்களை இந்தியர்களுக்கு அமெரிக்கா வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.இவற்றில், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்க திட்டமிட்டுள்ள வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் குடியேற்றம் அல்லாத விசாக்கள் (NIV) குறிப்பிடத்தக்கவை. ஜனவரி 2025-ல் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த குடியேற்றம் அல்லாத விசாக்களின் (NIV) எண்ணிக்கை 131,172-ஐ எட்டியது. இது ஜனவரி 2024-ல் 114,496 ஆக இருந்தது. ஜனவரி 2025-ல் வழங்கப்பட்ட மொத்த NIV-களில் இந்தியர்களுக்கான NIV-களும் 13.72% ஆகும்.இந்த உயர்வு, சட்டப்பூர்வ குடியேறிகளை, குறிப்பாக திறமையான உழைப்பு மூலம் பொருளாதாரத்திற்கு பங்களிக்க கூடியவர்களை அமெரிக்கா தொடர்ந்து வரவேற்கிறது என்பதைக் குறிக்கிறது. அமெரிக்க நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளுக்கு பங்களிக்கக்கூடிய திறமையான புலம்பெயர்ந்தோரை தீவிரமாகத் தேடி வருகிறது. புதுமை மற்றும் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை ஆதரிக்கவும் அமெரிக்க பொருளாதாரம் திறமையான நிபுணர்களை பெரிதும் நம்பியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.படித்த மற்றும் திறமையான புலம்பெயர்ந்தோர் இந்தத் துறைகளில் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். மேலும் இது வழங்கப்படும் விசாக்களின் அதிகரிப்பில் தெரிகிறது. ஜனவரி 2025-ல் வழங்கப்பட்ட வணிக மற்றும் சுற்றுலா (B1/B2) விசாக்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 91,096ஆக கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல, மாணவர் விசாக்கள் எண்ணிக்கை ஜனவரி 2024-ல் 590 ஆக இருந்து ஜனவரி 2025-ல் 1,167 ஆக அதிகரித்துள்ளது. திறமையான நிபுணர்களுக்கான H1B பணி விசாக்கள் 15,710-லிருந்து 17,876 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் H1B விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களின் H4 சார்ந்த விசாக்களும் கடந்த ஆண்டு 9,821 இலிருந்து இந்த ஜனவரியில் 10,833 ஆக அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் திறமையான புலம்பெயர்ந்தோரின் பங்கு:”திறமையான குடியேறிகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள், அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்,” என்று அமெரிக்க குடியேற்ற ஆலோசகர் நர்பத் சிங் பப்பர் கூறினார் . “பல இந்தியர்கள் கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பொருளாதார வருமானத்திற்கு பங்களிக்கின்றனர்.மேலும் உலகளவில் நாட்டின் போட்டித்தன்மையை பராமரிக்க அவர்களின் பங்களிப்புகள் அவசியம்”.சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதில் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான அணுகுமுறை இருந்தபோதிலும் வணிகம், மாணவர் மற்றும் திறமையான வேலை வகைகளில் சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதில் அதிகரிக்கிறது. இந்த பிரிவுகள் அமெரிக்காவின் உலகளாவிய போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கு அவசியமானதாகக் கருதப்படுகின்றன.அமெரிக்க குடியேற்றத்திற்கான எதிர்காலக் கண்ணோட்டம்:”பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் சட்டப்பூர்வ குடியேறிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் மதிப்பைச் சேர்க்கக்கூடிய மக்களுக்கு அமெரிக்கா இன்னும் திறந்திருக்கிறது என்பதற்கான தெளிவான நிலைதான் இது” என்று அமெரிக்க குடியேற்ற ஆலோசகர் நர்பத் சிங் பப்பர் கூறினார். டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், சட்டப்பூர்வ குடியேற்றம் அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன