Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் காச நோய் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பொலிஸாரின் அடாவடி

Published

on

Loading

தமிழர் பகுதியில் காச நோய் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பொலிஸாரின் அடாவடி

உலக காச நோய் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று காலை இடம்பெற்ற போது வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை அங்கு கடமையில் நின்ற ஊடகவியலாளர்கள் இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் அழைத்து அவர்களது ஊடக அடையாள அட்டையை பெற்று அதனை பதிவு செய்து அவர்களது நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருந்த முச்சக்கர வண்டிகளையும் அங்கு நின்ற போக்குவரத்து பொலிசாரிடம் கூறி, போக்குவரத்து பொறுப்பதிகாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன