Connect with us

பொழுதுபோக்கு

விவாகரத்து வழக்கு விசாரணை: ஒரே காரில் வந்து பிரிவதாக கூறிய ஜி.வி – சைந்தவி!

Published

on

GV Prakash and Sainthavai

Loading

விவாகரத்து வழக்கு விசாரணை: ஒரே காரில் வந்து பிரிவதாக கூறிய ஜி.வி – சைந்தவி!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையைமப்பாளாகவும் நடிகராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், இருவரும் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக ஒரே காரில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.தமிழ் சினிமாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், தெறி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்த ஜி.வி.பிரகாஷ், 2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து அடியே, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது இசை நடிப்பு என பிஸியான இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் கிங்ஸ்டன் என்ற திரைப்படம் வெளியானது.இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். அந்நியன் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான சைந்தவி கடைசியான மார்க் ஆண்டனி என்ற படத்தில் பாடியிருந்தார். ஜி.வி – சைந்தவி இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனிடையே, தங்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக, ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதில், இருவரும் மனமுவந்து பிரிவதாக கூறியிருந்தனர். இதனால் வழக்கு விசாரணை ஒத்திவைகக்ப்பட்டது.இதனிடையே நீதிமன்றத்திற்கு விவாகரத்து தொடர்பான மனு தாக்கல் செய்ய, ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் ஒரே காரில் வந்துள்ளனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள், வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஒரே காரில் ஏறி இங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன