Connect with us

இலங்கை

இரண்டு புதிய தூதுவர்கள் – உயர்ஸ்தானிகர் நியமனத்திற்கு குழுவின் பரிந்துரை

Published

on

Loading

இரண்டு புதிய தூதுவர்கள் – உயர்ஸ்தானிகர் நியமனத்திற்கு குழுவின் பரிந்துரை

இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது.

அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் நியமனம் பற்றிய பரிந்துரைக்கும் குழு அனுமதி வழங்கியது.

Advertisement

அதற்கமைய, கியூபா குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக ரத்னாயக்க முதியன்சலாகே, மஹிந்த தாச ரத்னாயக்க பெயரையும், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பிவித்துரு ஜனக் குமரசிங்க பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் வடஅயர்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனாதீர துமுன்னகே நிமல் உபாலி சேனாதீர பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரிய பெயரையும் குழு பரிந்துரைத்துள்ளது.

Advertisement

பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, குமார ஜயக்கொடி, அனில் ஜயந்த, ஹினிதும சுனில் செனவி, பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன