Connect with us

இலங்கை

பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

Published

on

Loading

பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்வதற்காக இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள், கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடியம்பலம பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர்கள் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குச் சென்று, அங்கிருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளுக்கு இலங்கையில் தங்குவதற்கு வழங்கப்பட்ட விசா காலம் முடிந்து விட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இவர்கள், இலங்கையிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளை வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன