Connect with us

இந்தியா

‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு…’: இ.பி.எஸ்-ஐ சந்தித்த பிறகு அமித்ஷா ட்வீட்

Published

on

Amit shah

Loading

‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு…’: இ.பி.எஸ்-ஐ சந்தித்த பிறகு அமித்ஷா ட்வீட்

டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​ என்​று பதி​விட்​டுள்​ளார்​. அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி நேற்​று சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம் டெல்​லி சென்​ற நிலையில் டெல்​லி​யில்​ திறந்​து​வைத்​த அதி​முக அலு​வல​கத்​தை அவர்​ பார்​வை​யிட்​டார்​.  மேலும் நேற்​று சட்​டப்​பேர​வைக்​ கூட்​டத்​தொடர்​ முடிந்​ததும்​, அதி​முக முன்​னாள்​ அமைச்​சர்​கள்​ எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனு​சாமி ஆகியோர்​ டெல்​லி சென்​றனர்​. இந்​நிலை​யில்​, நேற்​று இரவு திடீரென மத்​தி​ய அமைச்​சர்​ அமித்​ஷாவை அவரது இல்​லத்​தில்​ அதி​முக பொதுச் செய​லா​ளர்​ எடப்பாடி பழனி​சாமி உள்ளிட்டோர் சந்​தித்​துப்​ பேசி​னர்.அப்​போது, தமிழகத்​தின்​ அரசி​யல்​ நில​வரம்​, கூட்டணி மற்​றும் சட்​டம்​-ஒழுங்​கு பிரச்​சினை உள்​ளிட்​ட​வை தொடர்​பாக இருவரும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்​த சந்​திப்​பைத்​ தொடர்ந்​து அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, “2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்​று குறிப்​பிட்டுள்​ளார்​.तमिलनाडु में वर्ष 2026 में NDA की सरकार बनते ही ‘शराब की बाढ़’ और ‘भ्रष्टाचार की आँधी’ थम जाएगी।2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும். pic.twitter.com/GWopmm38Ty

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன