Connect with us

இலங்கை

முகாமையாளரை கதிரையில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்; விசாரணைகள் ஆரம்பம்

Published

on

Loading

முகாமையாளரை கதிரையில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்; விசாரணைகள் ஆரம்பம்

காலி – மாப்பலகம குடமலான தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையில் கட்டி வைத்துத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த தோட்டத்தில் பழமைவாய்ந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் வைத்து முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பின்னர் குறித்த முகாமையாளர் கூச்சலிட்டதால் தோட்டத்தில் பணியாற்றும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதுடன், அந்த நபரையும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முகாமையாளரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ வைத்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன