Connect with us

சினிமா

மனோஜின் முடிவால் குடும்பத்தில் ஏற்பட்ட பரபரப்பு…! புதிய கதைக்களத்துடன் சிறகடிக்க ஆசை..!

Published

on

Loading

மனோஜின் முடிவால் குடும்பத்தில் ஏற்பட்ட பரபரப்பு…! புதிய கதைக்களத்துடன் சிறகடிக்க ஆசை..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் யாரு என்ன சொன்னாலும் சரி அம்மா சொல்லாம நான் ரோகிணிய வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வரமாட்டேன் என்று அண்ணாமலையப் பாத்துச் சொல்லுறார். அதுக்கு முத்து இவனையெல்லாம் திருத்தவே முடியாது என்று சொல்லுறார். இதனை அடுத்து அண்ணாமலை மனோஜூ நான் சொல்லுறத கொஞ்சம் ஜோசி என்று சொல்லுறார். அதுக்கு மனோஜ் இல்ல அப்பா இது என்னோட பிரச்சனை நானே பாத்துக் கொள்ளுறேன் என்று சொல்லுறார்.அதைக் கேட்ட முத்து என்னடா பேசிக்கொண்டிருக்க வார்த்தையப் பாத்துக் கதை என்று சொல்லுறார். மேலும் அப்பாட்ட பேசுற முறை சரியில்ல என்றதுடன் அவர் இல்லன்னா நீ இல்ல அதுக்கு ஏத்த மாதிரி கதை என்கிறார். அதுக்கு முத்து நான் யாரையும் தப்பா சொல்லல ரோகிணி விஷயத்தில அம்மா எடுத்த முடிவு தான் சரி என்கிறார் மனோஜ். இதனை அடுத்து அண்ணாமலை உன்ட அம்மாவுக்கு எதையும் ஒழுங்கா ஜோசிக்கத் தெரியாது என்று சொல்லுறார்.இதைக் கேட்ட மனோஜ் இல்ல அப்பா என்னால முடியாது நான் அவள கூட்டிக்கொண்டு வரமாட்டேன் என்கிறார். அதைக் கேட்ட மீனா, மாமா நீங்க ஒன்னும் ஜோசிக்காதீங்க எங்கட குடும்பத்துக்கு ஏதோ நேரம் சரியில்ல என்று சொல்லுறார். மேலும் முத்து அண்ணாமலையப் பாத்து நீங்க ஒன்னும் கவலைப்படாத அவன் சரி ஆகிடுவான் என்று சொல்லுறார்.இதனைத் தொடர்ந்து விஜயா, பார்வதி வீட்ட போய் ரோகிணியப் பற்றிக் கோபமாகக் கதைக்கிறார். அதைக் கேட்ட பார்வதி நீ மூன்று மருமகளையும் ஒரே மாதிரி பாத்திருக்கோணும் என்று சொல்லுறார். அதுக்கு விஜயா வேணாம் பார்வதி ஏன் கோபத்தை ஏத்தாத என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து பார்லர் அம்மா எங்க போயிருப்பானு தெரியல என்று சொல்லுறார். பின் மனோஜ் ரோகிணி தனக்குப் பொய் சொல்லிட்டாள் என்று குடிச்சுக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன