இலங்கை
பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை; சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு

பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை; சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு
அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இதன்போது சந்தேக நபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார், பாதிக்கப்பட்ட வைத்தியரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர் வழக்கு தொடர்பில் கடந்த இரண்டு தடவைகளிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.