Connect with us

சினிமா

முதல் நாளே பிரச்சனை!! வீர தீர சூரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா..

Published

on

Loading

முதல் நாளே பிரச்சனை!! வீர தீர சூரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா..

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீர தீர சூரன். சியான் விக்ரம் நடிப்பில் நேற்று மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸாகவிருந்த வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு ஒளிப்பரப்பாகவிருந்தது.ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் 9 மணி காட்சிக்கு தடை விதிக்கப்படது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில், படக்குழுவினர் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு படத்தின் மீதுள்ள தடையை நீக்கி 4 மணிக்கு காட்சிக்கு அனுமதி அளித்தது.முதல் நாள் முதல் காட்சி 4 மணிக்கு துவங்கி ரசிகர்கள் மத்தில் அமோக வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள வீர தீர சூரன் படம் முதல் நாள் மட்டுமே 2 காட்சிகள் மட்டுமே ஒளிப்பரப்பாகியது.அந்தவகையில் முதல் நாள் மட்டும் உலகளவில் வீர தீர சூரன் திரைப்படம் ரூ. 2.2 கோடி வசூல் செய்திருக்கிறது. மக்கள் மத்தில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வரும் வீர தீர சூரன் படம் விரைவில் 50 கோடியை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன