Connect with us

இலங்கை

புனர்வாழ்வு நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு

Published

on

Loading

புனர்வாழ்வு நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு

   கம்பஹா, மினுவாங்கொடை பன்சில்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த நபரொருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

போதைப்பொருட்களுக்கு அடிமையான இவர் குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நீண்ட நாட்களாக புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து இவர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன