இலங்கை
அருச்சுனா எம்பி மீது கடும் கோபத்தில் பெண் வேட்பாளர்!

அருச்சுனா எம்பி மீது கடும் கோபத்தில் பெண் வேட்பாளர்!
யாழ்ப்பாணம் ஊடக அமைத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் , உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் அருச்சுனா எம்பி இன் முகத்திரையை கிழித்தி தொங்கவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நவாலி வடக்கை சேர்ந்த குலதீபன் – வனீஸ்வரி எனும் பெண்ணே தனது அருச்சுனா மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அருச்சுனா எம்பி இன்று ஒரு கட்சி நாளை என ஒரு கட்சி என தாவுவார் என்றும் அவர் கூறும் கதைகளை நம்பி உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
அதோடு புலம்பெயர் மக்களை ஏமாற்றி பணம் பெற்று , மக்களை பற்றியோ அல்லது எமது சமூகத்தை பற்றிய அக்கறை இன்றி தன்னிசையாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.