Connect with us

சினிமா

‘கடைசி உலகப் போர்’ வெற்றிக்குப் பின் ஹிப் ஹாப் ஆதி எடுத்த புதிய முயற்சி..!என்ன தெரியுமா?

Published

on

Loading

‘கடைசி உலகப் போர்’ வெற்றிக்குப் பின் ஹிப் ஹாப் ஆதி எடுத்த புதிய முயற்சி..!என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல்துறை திறமை கொண்ட நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குநரான ஹிப் ஹாப் ஆதி, தற்போது தனது அடுத்த படத்துக்கான தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கடைசி உலகப் போர்’ என்ற சமீபத்திய படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் அவரை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.ஹிப் ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையமைப்பின் ஊடாகப் பிரபலமானவர். அவரது முதல் படம் ‘மீசைய முறுக்கு’ மூலம் கதாநாயகனாகவும் இயக்குநராகவும் திரைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து நட்பே துணை , நான் சிரித்தால், அன்பறிவு போன்ற திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையே உருவாக்கினார்.2024ல் வெளியான ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் ஹிப் ஹாப் ஆதியின் புதிய முயற்சியாகவே காணப்பட்டது. இப்படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில், ஹிப் ஹாப் ஆதி தனது அடுத்த படத்துக்காக ‘ஜோ’ திரைப்பட இயக்குநரான ஹரிஹரன் ராமுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த புதிய திரைப்படத்தை பிரமோத் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இத்தகவல் ஆதியின் அனைத்து ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன