Connect with us

இலங்கை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்துக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை!

Published

on

Loading

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்துக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் நிரூபிக்கப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுள்ளது .

இதேவேளை, பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுள்ளது.

Advertisement

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுடன் பிரதிவாதிகளுக்கு குறித்த தொகை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன