இலங்கை
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளர் – அரசாங்க அதிபர் சந்திப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளர் – அரசாங்க அதிபர் சந்திப்பு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளரும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமும், முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருமான திரு. க. மகேசன் அவர்கள் இன்றைய தினம் (03.04.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தினால் நடைமுறைப்படுத்திவரும் திட்டங்களின் முன்னேற்றங்களைக் கேட்டறிந்து கொண்டார். (ப)