Connect with us

இலங்கை

பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த பேருந்து ; சோகத்தில் தவிக்கும் பிள்ளைகள்

Published

on

Loading

பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த பேருந்து ; சோகத்தில் தவிக்கும் பிள்ளைகள்

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் கல்லேல்ல பகுதியில், வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது பேருந்து ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உயரிழந்த பொலிஸ் அதிகாரி கல்லேல்ல பகுதியில் தனது நண்பர்களுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்த நபர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 55 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையாவார்

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இச்சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன