Connect with us

இலங்கை

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

Published

on

Loading

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை கைது செய்துள்ளதாக கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளின் தாயான 57 வயதுடையவரே பலியாகியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான அவரது 22 வயது மகனும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கிராண்ட்பாஸ் பொலிஸார் பிரிவில் உள்ள மோதர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசிக்கும் சந்தேக நபரால் கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் காயமடைந்த அவரது மகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு அறையில் தரையில் மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மூத்த மகனும் சந்தேக நபரும் அடுத்த அறையில் தங்கியிருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அதிக அடிமையான சந்தேக நபர், தனது மனைவி தூங்கும் இடத்திற்கு வந்து, வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

சம்பவத்தைத் தடுக்க தலையிட்ட தனது மகனையும் சந்தேக நபர் கத்தியால் குத்திவிட்டு, பின்னர் தப்பிச் சென்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன