இலங்கை
கோசல நுவனின் மறைவு; ஜனாதிபதி அநுர வெளியிட்ட பதிவு

கோசல நுவனின் மறைவு; ஜனாதிபதி அநுர வெளியிட்ட பதிவு
அண்மையில் காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நெகிழ்ச்சியான பதிவொன்றினை இட்டுள்ளார்.
சமூகவலைத்தளத்தில் ஜனாதிபதி அனுர பதிவிட்டுள்ளதாவது,
“பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.”
உங்களை இழந்தது மிகப்பெரிய இழப்பு…
நீங்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
சகோதரர் கோசலா,
உங்களுக்கு புரட்சிகரமான வணக்கம்!” என ஜனாதிபதி அனுர சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.