Connect with us

இலங்கை

குருவார பிரதோஷ விரதத்தில் பாவங்களைப் போக்க எவ்வாறு வழிபட வேண்டும்

Published

on

Loading

குருவார பிரதோஷ விரதத்தில் பாவங்களைப் போக்க எவ்வாறு வழிபட வேண்டும்

பிரதோஷ விரதம், சிவனுக்கும், பார்வதிக்கும் உரியது. பிரதோஷ விரதம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான விரதம். இது மாதத்திற்கு இரண்டு முறை வரும். இந்த ஆண்டு பங்குனி மாத திரயோதசி திதி ஏப்ரல் 9-ஆம் திகதி வருகிறது. பிரதோஷ விரதம் பாவங்களை போக்கும் தன்மை கொண்டதாகும்.

சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பிரதோஷ விரதம் மிக முக்கியமானதாகும். அதாவது, ஒவ்வொரு பட்சத்திலும் வரும் திரியோதசி திதி அன்று பிரதோஷ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் மாதத்திற்கு இரண்டு முறை, 13-வது சந்திர நாளில் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

இந்த விரதத்தை கடைபிடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

பிரதோஷ விரதம் என்பது சிவபெருமானுக்கு உகந்த விரதம். திரியோதசி நாளில் அந்தி சாயும் நேரத்தில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வழிபட்டால் நல்லது நடக்கும். தடைகள் நீங்கும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த வருடம், ஏப்ரல் மாதத்தில் 10-ம் தேதி வருகிறது.

Advertisement

இது வியாழக்கிழமை வருவதால், குரு பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தின் நேரம், பூஜை செய்யும் முறை, முக்கியத்துவம் போன்ற விவரங்களை இப்போது பார்க்கலாம்

பிரதோஷ விரதம் அன்று சூரியன் மறைவதற்கு முன் குளிக்க வேண்டும். சிவபெருமான், பார்வதி தேவி, விநாயகர் மற்றும் நந்தி ஆகியோருக்கு பூஜை செய்ய வேண்டும். சிவலிங்கத்திற்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்.

ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் அருகம்புல் வைக்க வேண்டும். அருகம்புல்லில் தாமரை வரைய வேண்டும். இது ஆன்மீக வளர்ச்சியையும், ஞானத்தையும் குறிக்கிறது.

Advertisement

பூக்கள், வெற்றிலை, பாக்கு, நாணயங்கள் மற்றும் அரிசி போன்றவற்றை கடவுளுக்கு படைக்க வேண்டும். மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். விபூதியை நெற்றியில் பூச வேண்டும். இது ஆன்மீக தூய்மையை குறிக்கிறது.

பிரதோஷ விரதத்தில் ஒரு தீபம் ஏற்றினால், அது கடவுளை மகிழ்வித்து நல்ல பலன்களை தரும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன