இந்தியா
சிங்கப்பூர் பாடசாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணைமுதல்வரின் மகன்!

சிங்கப்பூர் பாடசாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணைமுதல்வரின் மகன்!
சிங்கப்பூரில் கல்வி கற்றுவரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் ‘மார்க் சங்கர்‘, பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்துள்ளார்.
8 வயதான மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் நிலையில் குறித்த பாடசாலையில் நேற்று திடீரென தீபத்து ஏற்பட்டுள்ளது.
இத் தீவிபத்தில் காயமடைந்த மார்க் சங்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகனைப் பார்ப்பதற்காக தான் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்து பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.