Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் பெரும்தொகை மாட்டு இறைச்சி அழிப்பு

Published

on

Loading

தமிழர் பகுதியில் பெரும்தொகை மாட்டு இறைச்சி அழிப்பு

   முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்று (9) கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தையில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாவனைக்குதவாத வகையில் இருந்த மாட்டு இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.

Advertisement

இதன்போது விற்பனையாளர்களுக்கு , கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் உரிமையாளரின் அனுமதியுடன் எரித்து அழிக்கப்பட்டிருந்தது.

சோதனை நடவடிக்கையில் விசுவமடு சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஷ்ரன் , கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன், புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் கோகுலன் ஆகியோரும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன