Connect with us

இலங்கை

பெண் உதவியாளருடன் சிக்கிய மரண விசாரணை அதிகாரி

Published

on

Loading

பெண் உதவியாளருடன் சிக்கிய மரண விசாரணை அதிகாரி

அநுராதபுரம் பிரதேசத்தில் ,உயிரிழந்த நபரொருவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு 2 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர் தனது அலுவலகத்தில் வைத்து இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இதன்போது, அங்கு இருந்த திடீர் மரண விசாரணை அதிகாரியின் பெண் உதவியாளரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன